Malainattu Machane Song Lyrics

ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ...... பாடல் வரிகள்

Solaikuyil (1989)
Movie Name
Solaikuyil (1989) (சோலைக்குயில்)
Music
M. S. Murari
Singers
K. S. Chitra
Lyrics
Kuruvi Karambai Shanmugam
ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ......
மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே
கரையோர பூவாய் நான் மணம் வீசிப் பூக்கும் நாள்
இதழோரம் நனைய நனைய நனைய
இதமாக தழுவ தழுவ தழுவ
தனியாக ரோசாப்பூ இனியேது மாராப்பு...
மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே

இளமானின் மனமே உனை நாடும் தினமே
இரவும் பகலும் சுகம் தேடவே
குளிர் வீசும் இரவில் வரவேண்டும் விரைவில்
இளமை உறவின் இசை பாடவே

ஒரு கோடிப் பூக்கள் சூடும் மலைராணி நான்
மணநாளில் வாழ்த்துப் பாட கொடி நாட்டினான்
மெதுவாய் வருவாய் இதமாய்
தருவாய் துணையாய் நீ
மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே

பனிக்கால நேரம் தளிர்மேனி முழுதும்
பதியும் விழிகள் கனல் மூட்டுமே
கதிர் சாயும் பொழுது மருதாணி விரல்கள்
உனையே உறவாய் தொட ஏங்குமே

தினந்தோறும் மாலை வேளை வரும் மோகமே
மனசுக்குள் மின்னல் போல அலை பாயுமே
கனவாய் நினைவாய் எனையே
தொடலாம் நிஜமாய் நீ.....

மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே
கரையோர பூவாய் நான் மணம் வீசிப் பூக்கும் நாள்
இதழோரம் நனைய நனைய நனைய
இதமாக தழுவ தழுவ தழுவ
தனியாக ரோசாப்பூ இனியேது மாராப்பு...
மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே