Velli Mani Song Lyrics

வெள்ளி மணி ஓசையிலே பாடல் வரிகள்

Iru Malargal (1967)
Movie Name
Iru Malargal (1967) (இரு மலர்கள்)
Music
M. S. Viswanathan
Singers
P. Susheela
Lyrics
Vaali
வெள்ளி மணி ஓசையிலே 
உள்ளமெனும் கோயிலிலே
வெள்ளி மணி ஓசையிலே 
உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே
வள்ளல் வரும் வேளையிலே
வாழ்வு வரும் பூ மகளே

வெள்ளி மணி ஓசையிலே 
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...


பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
தவமிருந்தேன் கோடி முறை
தவமிருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை

வெள்ளி மணி ஓசையிலே 
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...


மணி விளக்காய் நானிருக்க
மாளிகையாய் தானிருக்க
மணி விளக்காய் நானிருக்க
மாளிகையாய் தானிருக்க
மனது வைத்தான் சேர்ந்திருக்க
மனது வைத்தான் சேர்ந்திருக்க
கருணை வைத்தான் கை கொடுக்க

வெள்ளி மணி ஓசையிலே 
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...