Kannukkul Deepam Song Lyrics

கண்ணுக்குள் தீபம் ஏந்தி பாடல் வரிகள்

Sangu Pushpangal (1989)
Movie Name
Sangu Pushpangal (1989) (சங்கு புஸ்பங்கள்)
Music
Guna Singh
Singers
K. J. Jesudass, K. S. Chitra
Lyrics
Anbu Kani
ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி
கண்மணியே ஓடி வா
நெஞ்சுக்குள் ஜீவ ராகம்
என்னுயிரே நீ பாடி வா ஆடி வா

பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி
கண்மணியே ஓடி வா
நெஞ்சுக்குள் ஜீவ ராகம்
என்னுயிரே நீ பாடி வா ஆடி வா
இருவரும் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி

ஆண் : ரோஜாப்பூ கூட்டங்களே
இளமை தவழும் அழகு பெண்ணோவியம்
ராஜாத்தி கூந்தலிலே பூ மேகம் நீந்திடுமோ
பெண் : செந்தாழம் பூவை முந்தானை மூட
என் தேகம் சூடேறும் இளம்
கண்ணோரம் தேனூறும்

ஆண் : காதல் அரங்கேறும் நேரங்களே
இளமை விளையாடும் பருவங்களே
பெண் : பூவை பூவாகுமே தேகம் நோகாமலே
வாசம் வீசும் மலர்களே...

ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி
கண்மணியே ஓடி வா
பெண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம்
என்னுயிரே நீ பாடி வா ஆடி வா
இருவரும் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி

பெண் : செந்தூரம் சிந்தாமலே
இரவும் பகலும் இனிமை சுகம் தேடுவோம்
பூவாடை பறந்திடுமோ என் தேகம் மறந்திடுமோ
ஆண் : என் இதயம் விற்று உன் இதயம் வாங்கி
உயிரோடு உயிர் சேரும்
என்றும் எழுதாத கதை பேசும்

பெண் : தெய்வம் நினைத்தாலும் பிரியாமலே
இன்று உன் நெஞ்சே சிறையாகுமே
ஆண் : வண்ணப் பூமேடையில் இரண்டு கிளி சேருது
காதல் பேசும் உயிர்களே...

பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி
கண்மணியே ஓடி வா
ஆண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம்
என்னுயிரே நீ பாடி வா ஆடி வா
இருவரும் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி.....