Velli Mani Kinnathiley Song Lyrics

வெள்ளி மணி கிண்ணத்த்தில பாடல் வரிகள்

Dharmathin Thalaivan (1988)
Movie Name
Dharmathin Thalaivan (1988) (தர்மத்தின் தலைவன்)
Music
Ilaiyaraaja
Singers
K. S. Chithra, Malaysia Vasudevan, Mano
Lyrics
Gangai Amaran
வெள்ளி மணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தானத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
அடியே ராசாத்தி சிரிக்காதடி
அன்பே என் நெஞ்ச பறிக்காதடி
அள்ளிக் கொள்ளப் போறான் உன்ன அழகாகத் த்தான்
கில்லிக்கொள்ளப் போறான் இப்போ மெதுவாகத் த்தான்

வெள்ளி மணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தானா தான்

பார்த்துப் பார்த்துப் பார்வை எல்லாம்
பூவாகி போனது மானே
பூவும் பூத்து பிஞ்சாகித் தான்
காயாகி போனவ நானே
பிஞ்சானாதென்ன காயானதென்ன
அஞ்சாமல் கூறடி நீயும் தான்
அப்பாவி மாமா ஆராய்ச்சி வேணாம்
இப்போது எடுங்க நேரம் தான்
மெய்யோடு நானும் மெய்யாகச் சேர
மேலாடை போல ஒண்ணாக கூட
வரவேண்டும் ஒரு நேரம்
அதச் சொல்லு மானே

அள்ளிக் கொள்ளப் போறேன் உன்ன அழகாகத் தான்
கிள்ளிக் கொள்ளப் போறேன் இப்போ மெதுவாகத் தான்

பாலும் தேனும் இப்போது தான்
ஒண்ணாகச் சேர்ந்தது இன்று
பாசம் அன்பு நேசம் எல்லாம்
என் கண்கள் பார்த் தது இன்று
எப்போதும் உன்னை நீங்காமல் வாழும்
நன் நாளை கேட்பது நானும் தான்
குற்றால காற்றும் சங்கீதம் பாடும்
இப்போது என் மனம் போலத் தான்
அன்புள்ள நெஞ்சம் தன்னோடு கொஞ்சும்
இன்பங்கள் தானே என்னோடு தஞ்சம்
இனி மேலும் புரியாத ஒரு கேள்வி இல்லை

அள்ளிக்கொள்ளப் போறேன் உன்ன அழகாகத் தான்
கில்லிக்கொள்ளப் போறேன் இப்போ மெதுவாகத் தான்

வெள்ளிமணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தானத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்

அடியே ராசாத்தி சிரிக்காதடி
அன்பே என் நெஞ்ச பறிக்காதடி

அள்ளிக்கொள்ளப் போறேன் உன்ன அழகாகத் தான்
கில்லிக்கொள்ளப் போறேன் இப்போ மெதுவாகத் தான்