Aarariraro Naan Padukiren Song Lyrics

ஆராரிராரோ நான் பாடுகின்றேன் பாடல் வரிகள்

Adiyum Andamum (2014)
Movie Name
Adiyum Andamum (2014) (ஆதியும் அந்தமும்)
Music
L.V. Ganeshan
Singers
Naresh Iyer
Lyrics
Na. Muthukumar

ஆராரிராரோ நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி
உன் காயம் எல்லாம் தானாகத் தீரும்
என் தோளில் சாய்ந்து தூங்கடி

கனவாய் எல்லாம் மறைந்தே போகும்
விடிந்தால் இருள் விட்டுப் பறக்கும்
உனக்காய் தினம் விழித்தேன் அன்பே
உறங்கவில்லையே

கண்ணீர் உந்தன் கன்னத்தைத் தொட்டால்
என் விரல் வந்து தொட்டுத் துடைக்கும்
வெண்ணிலா மேலே கறைகள் எல்லாம்
குறைகள் இல்லையே.........(ஆராரிராரோ)

உயிரே உந்தன் உணர்வில் ஒரு
சலனம் இன்று என்ன நினைப்பு
வலிகள் எல்லாம் தொலையும் வரை
காவலிருப்பேன்.......

முள் மேல் உந்தன் நிழல் விழுந்ததால்
குறைந்தா விடும் உன் மதிப்பு
உன்னைப் பார்க்கின்ற நொடி போதுமே
உயிர் பிழைப்பேன்.........(ஆராரிராரோ)