Nee Padhi Naan Song Lyrics

நீ பாதி நான் பாடல் வரிகள்

Keladi Kanmani (1990)
Movie Name
Keladi Kanmani (1990) (கேளடி கண்மணி)
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas
Lyrics
Gangai Amaran
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண் : நீயில்லையே இனி
நானில்லையே உயிர் நீயே

பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா

ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

***

பெண் : மானப்பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்

ஆண் : கானப்பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவப்பாடல்

பெண் : மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த
பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே

ஆண் : மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை
ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே

பெண் : மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணா

ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

***

ஆண் : இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே

பெண் : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்

ஆண் : சோகம் எதற்கு என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா

பெண் : இந்த மனம்தான் என் மன்னவனும்
வந்து உலவும் நந்தவனம் தான் அன்பே வா

ஆண் : சுமையானது ஒரு சுகமானது
சுவை நீ தான்

பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா

ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே

பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா

ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே