Nalla Idam Song Lyrics

நல்ல இடம் நீ பாடல் வரிகள்

Galatta Kalyanam (1968)
Movie Name
Galatta Kalyanam (1968) (கலாட்டா கல்யாணம்)
Music
M. S. Viswanathan
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி 

நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி

எங்கே உன் ஜாடை விழும்
அங்கே என் ஆசை வரும்
அன்பே உன் பேர் எழுதும்
கண் பார்வை நாள் முழுதும்

நல்ல இடம் நான் வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண புது ரோஜா

நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட
பத்தரை மாற்றுத் தங்கம்
குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட
பொங்கிடும் வெள்ளம் எங்கும்

மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய
செவ்வண்ணக் கால்கள் பின்ன
நித்தமும் ஆடிட இத்தனை நாடக 
ஒத்திகை பார்ப்பதென்ன

தழுவாதோ கைகள் தானாக 

உன்னால் கனிந்தேன் கனியாக

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா

லலல லலலா... லா... லலல லலலலா... லா...

ஆஹஹாஹ ஹாஹஹஹா...
ஆஹஹாஹ ஹாஹஹஹா...

கட்டழகானது ஒட்டுறவாடிட
எண்ணங்கள் தேடிப் போகும்
சித்திரப் பூமகள் முத்தமளந்திட
எத்தனைக் காலம் ஆகும்

முத்து மொழிக் கிளி கொத்து மலர்க் கொடி
தித்தித்த வார்த்தை சொல்வாள்
வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில் 
சந்திக்க வேண்டும் என்பாள்

இதமான இன்பம் சேராதோ

இன்றே இதயம் குளிராதோ

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா