Thoongatha Vizhigal Song Lyrics

தூங்காத விழிகள் பாடல் வரிகள்

Agni Natchathiram (1988)
Movie Name
Agni Natchathiram (1988) (அக்னி நட்சத்திரம்)
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas, S. Janaki
Lyrics
Vaali
பெண்:
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

ஆண்:
மாமர இலை மேலே ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
பெண்:
ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
ஆண்:
நாளும் நாளும் ராகம் தாளம்
சேறும் நேரம் தீரும் பாரம்
பெண்:
அ..அஅ..அஅ.. ஆஆ.. ஆஆ..

ஆண்:
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

பெண்:
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
ஆண்:
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கலை அல்லவோ
பெண்:
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மானுடம் உறவாடும் கலை என்னவோ
ஆண்:
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
பெண்:
மேலும் மேலும் மோகம் கூடும்
ஆண்:
தேகம் யாவும் கீதம் பாடும்
பெண்:
அ..அ..ஆஆ..
ஆண்:
அ..அ..ஆஆ..

பெண்:
தூங்காத விழிகள் ரெண்டு
ஆண்:
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பெண்:
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆண்:
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது

இருபாலர்:
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று