Solai malare Song Lyrics

சோலை மலரே பாடல் வரிகள்

Pattu Vaathiyar (1995)
Movie Name
Pattu Vaathiyar (1995) (பாட்டு வாத்தியார்)
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas
Lyrics
Vaali
ஆண் : ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
நானும் உங்கள் ஜாதி
கானக்குயிலே
ஞானம் உண்டு பாட
கானக்குயிலே
உன்னைப் போலே நானும்
கூவித் திரிவேன்
உச்சி மலை மீது
தாவித் திரிவேன்

சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
சோலை மலரே

***

ஆண் : வந்தாரை வாழ வைக்கும்
செந்தமிழர் நாடு
வற்றாத பாட்டுச் செல்வம்
வாழ்ந்திடும் வீடு
தென்னாட்டு கிராமம் எங்கும்
தென்றல் எனும் காற்று
தெம்மாங்கு பாடிச் செல்லும்
தாளமும் போட்டு
ஏத்தம் இட்டுப் பாட
பாட்டும் இருக்கு
ஏருக்கட்டிப் பாட
பாட்டும் இருக்கு
நாத்து நட்டுப் பாட
பாட்டும் இருக்கு
பாட்டுத்தானே பாட்டன்
சொத்து நமக்கு
இந்நாளும் ஓ எந்நாளும்
நம் செல்வங்கள் ஓ

சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
நானும் உங்கள் ஜாதி
கானக்குயிலே
ஞானம் உண்டு பாட
கானக்குயிலே
உன்னைப் போலே நானும்
கூவித் திரிவேன்
உச்சி மலை மீது
தாவித் திரிவேன்

சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே

பெண்குழு : னானே னானே
னானே னானே னா னா
தானானே தந்தானே
தானே தானே தா
னானே னானே
னானே னானே னா னா
னானே னானே
னானே னானே னா..

***

ஆண் : செவ்வானம் பூமியெல்லாம்
நல்வரவு கூறும்
சங்கீதம் பாடிக்கொண்டு
நான் வரும் நேரம்
சில்லென்று வாடை வந்து
என்னைத் தொட்டு ஓடும்
சிங்காரச்சோலை என் மேல்
பூ மழைத் தூவும்
மேகம் இந்த ஊரில்
மண்ணில் வருது
மோகம் கொண்ட
மண்ணை முத்தமிடுது
முத்தம் கொண்டதாலே
மொட்டு வருது
மொட்டுக்களைப் பார்த்தால்
மெட்டு வருது
சிட்டுப்போல் பூஞ்சிட்டுப் போல்
என் எண்ணங்கள் ஓ ஓ

சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
நானும் உங்கள் ஜாதி
கானக்குயிலே
ஞானம் உண்டு பாட
கானக்குயிலே
உன்னைப் போலே நானும்
கூவித் திரிவேன்
உச்சி மலை மீது
தாவித் திரிவேன்

சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
சோலை மலரே