Vaa Vaa Anbe Song Lyrics

வா வா அன்பே பாடல் வரிகள்

Eeramaana Rojaave (1991)
Movie Name
Eeramaana Rojaave (1991) (ஈரமான ரோஜாவே)
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas, S. Janaki
Lyrics
Vaali
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்

வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

***

மாலை நேர சூரியன்
மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின்
வசந்த கீதம் கேட்கிறான்

அந்தி வெய்யில் வேலைதான்
ஆசை பூக்கும் நேரம்
புல்லின் மீது வாடைதான்
பனியை மெல்ல தூவும்

போதும் போதும் தீர்ந்தது வேதனை

வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை

விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை

பெண் : வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்

வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

***

நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது
நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது

மலரை வண்டு மொய்த்திட மாதம் தேதி ஏது
மீன மேஷம் பார்ப்பதோ காதல் தோன்றும் போது

காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன்

கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன்

பெண் : நீயும் நீயல்ல நானும் நானல்லா கண்ணா

வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்

வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே