Oru Pon Maanai Song Lyrics

ஒரு பொன் மானை நான் பாடல் வரிகள்

Mythili Ennai Kaathali (1986)
Movie Name
Mythili Ennai Kaathali (1986) (மைதிலி என்னை காதலி)
Music
T. Rajendar
Singers
S. P. Balasubramaniam
Lyrics
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழ ரசம்
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

சலங்கையிட்டாள் ஒரு மாதுசங்கீதம் நீ பாடு

தத்தத்தகதிமி தத்தத்தகதிமி தத்தத்தகதிமி தோம் 
தாதுத ஜந்தரி தா தததுத ஜந்தரி தை தாதுத ஜந்தரி தததுத ஜந்தரி
தக்க தீங்கிணதோம் ததீங்கிணதோம் ததீங்கிணதோம் தா 

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரைப் பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிளி
கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள் 
ஜதி என்னும் மழையினிலே
ரதியிவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர்விட்டு
பூப்போலப் பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது

சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு 

நாதிந்தின்னா நாதிந்தின்னா நாதிந்தின்னா நாதிந்தின்னா
தித்தா திகுதிகு தித்தா திகுதிகு தித்தா திகுதிகு தித்தா திகுதிகு
திகதானதானதா திகதானதானதா திகதானதான 

சந்தனக் கிண்ணத்தில் குங்குமச் சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையில் பின்னழகில்
இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள் 

கலை நிலா மேனியிலே
சுளை பலா சுவையைக் கண்டேன்
அந்தக் கட்டுடல் மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதிதன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதிதன்னில் கவி சேர்க்குது

சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழ ரசம்
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு