Kallai vanthavan Song Lyrics

கல்லாய் வந்தவன் பாடல் வரிகள்

Mahakavi Kalidas (1966)
Movie Name
Mahakavi Kalidas (1966) (மகாகவி காளிதாஸ்)
Music
K. V. Mahadevan
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா

மந்தையில் மேய்கிற வெள்ளாடு
அந்தி சந்தைக்கு வந்தால் சாப்பாடு
பந்திக்கு முந்துற பெரும்பாடு
அது படிச்சவன் வகுத்த பண்பாடு
பந்திக்கு முந்துற பெரும்பாடு
அது படிச்சவன் வகுத்த பண்பாடு

கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா

ஆண்டியின் கையில் திருவோடு
தினம் அவனுக்கு வேலை தெருவோடு
இருப்பவன் சண்டை பொருளோடு
இந்த ஏழையின் சண்டை வயிறோடு
இருப்பவன் சண்டை பொருளோடு
இந்த ஏழையின் சண்டை வயிறோடு

கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா

காக்காய் உண்டு நரியுண்டு
வரிக்கழுதைகள் உண்டு புலியுண்டு
மனிதரில் இத்தனை வகையுண்டு
அவர் வாக்கினில் தெரியும் யாரென்று

கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா