O Raja Ennai Paaru Song Lyrics

ராஜா என்னைப் பாரு பாடல் வரிகள்

Deivame Thunai (1959)
Movie Name
Deivame Thunai (1959) (தெய்வமே துணை)
Music
S. M. Subbaiah Naidu
Singers
S. Janaki
Lyrics

ஓ..ராஜா என்னைப் பாரு ராஜா
ஓ..மாசிலா மணாளா
எதிலுமே இணையிலா உன் மீது அன்பாகினேன்
ஓ..ராஜா என்னைப் பாரு ராஜா..

ராணி மந்தஹாச ராணியே
மெள்ள மெள்ள வா வா
எதிரிலே விழியிலே
எந்நாளும் உன் ஆட்டமே......(ராணி)

சோர்வேயில்லா பிரேமையினால்
பறந்திடலாம் வானத்திலே
சுகம் காணவே கலை மாமணி
கூடவே பாரினிலே

அமர கீதம் என் இதயத்திலே
அதற்குத் தாளம் என் பாதத்திலே
அமர கீதமும் பாடிடலாம்
அழகு சேர நாம் ஆடிடலாம்
உலக இன்பம் காண......(ஓ..ராஜா)