Andanil Vaazhnthidum Song Lyrics

அனல் தனில் பாடல் வரிகள்

Chandralekha (1995)
Movie Name
Chandralekha (1995) (சந்திரலேக்கா)
Music
Ilaiyaraaja
Singers
Bhavatharani
Lyrics
அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ
அணைத்திடவே வந்த காற்றே காற்றே ஹோ
உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு
என் நெஞ்சை அங்கே சேர்த்திடு
அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ
அணைத்திடவே வந்த காற்றே காற்றே

இருவிழி கலங்கிடும் நேரம்
இந்த இதயத்தில் கன்மையின் பாரம்
ஒருமுறை உன்முகம் காண
இவள் உயிருடன் இருந்திட வேண்டும்
அன்புக்குள் ஆடும் மயில் அமைதியை தேடுதே
அன்னம் அவள் உந்தன் முகம் விழிகளில் ஆடுதே
வானம்தனில் மேகங்களும் இருள்தனை கூட்டுதே
வாழ்கை எனும் கேள்விக்கணை பயந்தவள் ஆக்குதே
என் கீதம் உன்னை இங்கேதான் கொண்டு வாராதோ இறைவா

அனல் தனில் வாடிடும் பூவை பூவை
அணைத்திடவே வந்த காற்றே காற்றே
உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு
என் நெஞ்சை அங்கே சேர்த்திடு
அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ
அணைத்திடவே வந்த காற்றே காற்றே

உறவையும் ஊரையும் மறந்து
இங்கு ஒருவழி கண்டிட நடந்தோம் ஹோ
தெய்வமும் துணை வரும் என்று
அன்பு தீபத்தின் ஒளியினை தொடர்ந்தோம் ஹோ
மக்கள் நிலை துன்பம் எனில் மன்னவன் வாடுவான்
அவன் வாழ்வில் ஒரு இன்பம் வர வழிதனை தேடுவான்
திக்கற்றவர் தும்பம்தனை தெய்வமும் ஏற்குமா
அந்த தெய்வம் எந்தன் எதிரினில வந்து இருவரை சேர்க்குமா
என் கீதம் உன்னை இங்கேதான் கொண்டு வாராதோ இறைவா

அனல் தனில் வாடிடும் பூவை பூவை
அணைத்திடவே வந்த காற்றே காற்றே
உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு
என் நெஞ்சை அங்கே சேர்த்திடு
அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ
அணைத்திடவே வந்த காற்றே காற்றே