Rojakale Song Lyrics

ரோஜாக்களே நம் பாடல் வரிகள்

Priyamaana Thozhi (2003)
Movie Name
Priyamaana Thozhi (2003) (பிரியமான தோழி)
Music
S. A. Rajkumar
Singers
Mahalakshmi Iyer
Lyrics
Pa. Vijay
ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே 
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே 
பூந்தூரலே சாமரங்கள் வீசுமே 
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே 
ரங்கோலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே 
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே

பறவைகளாய் பறவைகளாய் 
பறக்கும் சின்ன வயதினிலே 
கவலைகளை கவலைகளை காற்றில் பறக்க விடுவோமே 
பவல் மல்லி பவள மல்லி பூக்கும் அழகை ரசிப்போமே 
மணிக்கணக்கில் பூக்களிடம் அரட்டை அடித்து சிரிப்போமே 
மனதில் மனதில் இசையின் சாரலே 
இதுதான் வாழ்வில் இனிய நாட்களே 
நினைத்து நினைத்து மகிழ்வதனால் வாழ்கை இனிக்குமே

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே 
வான் மேகமே பனி சால்வை போர்த்துமே 
பூந்தூரலே சாமரங்கள் வீசுமே 
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே 
ரங்கோலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே

மலர்களிடம் மலர்களிடம் தேனைக் கொஞ்சம் கேட்போமே 
விழிகள் தரும் கனவுகளில் தேனை அள்ளி தெளிப்போமே 
அனைவருமே விரும்பிடவே பாசத்தோடு இருப்போமே 
புன்சிரிப்பை பரிசளித்து மனதை கொள்ளை அடிப்போமே 
குழந்தை பருவம் சுகத்தின் எல்லையே 
இதனை வாங்க விலைகள் இல்லையே 
வாழ்வில் என்றும் மறுபடியும் கிடைப்பதில்லையே

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே 
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே