Mannavan Vanthaanadi Song Lyrics

மன்னவன் வந்தானடி பாடல் வரிகள்

Thiruvarutchelvar (1967)
Movie Name
Thiruvarutchelvar (1967) (திருவருட்செல்வர்)
Music
K. V. Mahadevan
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
கலை மகள் துணை கொண்டு கலை வென்று
புகழ் கொண்ட காவலன் வாழ்க வாழ்க

மலை மகள் வரம் கொண்டு மலை போன்ற
பலம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க

திரு மகள் அருள் கொண்டு பொருள் கொண்ட
திருவருட் செல்வனே வாழ்க வாழ்க

இயல் இசை நாடகம் முதமிழ்
காக்கின்ற தலைவனே வாழ்க வாழ்க

குடி மக்கள் மனம் போல முடியாட்சி
காண்கின்ற கொற்றவா வாழ்க வாழ்க

நின் கோடி வாழ்க படை வாழ்க குடி வாழ்க
குளம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க

மன்னவன் வந்தானடி தோழி
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி

மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்
மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்
மன்னவன் வந்தானடி தோழி

செந்தமிழ் சொல் எடுத்து இசை தொடுப்பேன்
வண்ண சந்தத்திலே கவிதை சரம் தொடுப்பேன்
முன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்
முன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்
இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி

தூவிய பூவினில் மேனிகள் ஆடிட
நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்
மன்னவன் வந்தானடி

ச .. ரி .. க .. ம .. ப .. த . . நி …..
சரிகமபதனி சுரமோடு ஜதியோடு
நாத கீத ராக பாவம் தான் பெறவே
மன்னவன் வந்தானடி

காதர் கவிதை கடலெனப் பெருகிட
மாதர் மனமும் மயிலென நடமிடவே
மன்னவன் வந்தானடி

சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற
மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி

தித்தித்தால் அது செம்பொற் கிண்ணம்
தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்
சித்தத்தால் ஒரு காதற் சின்னம்
தத்தித் தாவென பாவை முன்னம்
என் மன்னவன் …

ச … சத்தமது தரவா
ரி … ரிகமபதநிசா
க … கருணையின் தலைவா
ம … மதி மிகு முதல்வா
ப … பரம் பொருள் இறைவா
த … தனிமையில் வரவா
நி … நிறையருள் பெறவா

ஆளும் புவி எழும் கடல் எழும் நடமாடும் படி வாராய்
அருள் தாராய் ..
ஆளும் புவி எழும் கடல் எழும் நடமாடும் படி வாராய்
அருள் தாராய் ..
அணு தினம் உன்னை வழி படும்
மாட மயில் இனி ஒரு
தலைவனைப் பணிவதில்லை

மன்னவன் வந்தானடி