Yeno Theriyalle Yethuvum Song Lyrics

ஏனோ தெரியல்லே பாடல் வரிகள்

Kollaikaran Magal (1968)
Movie Name
Kollaikaran Magal (1968) (கொலைகாரன் மகள்)
Music
T. G. Lingappa
Singers
S. Janaki
Lyrics
K. Devanarayanan

ஏனோ தெரியல்லே எதுவும் புரியல்லே
ஆடிடும் சிட்டு ஆத்திரப்பட்டு
உள்ளத்தில் என்ன சொல்லடி பட்டு
தேவையைச் சொல்லு காதலைச் சொல்லு
நீயும் பெண்தானே......(ஏனோ)

பாரடி கண்ணாலே பழகடி தன்னாலே
மனதில் பதிந்த உண்மையைச் சொல்ல
சொர்க்கமென்று எங்கோ இல்லை இங்கே இங்கே
சொல்லுதடி தென்றல் வந்து ஓஹோ......(ஏனோ)

பனியெனத் தண்ணீரே பட்டுவிடும் என் மீதே
உருகும் பருவம் மேனியில் துள்ள
தென்றலிலே சிற்றாடை கொஞ்சும் என்னை
சேதி ஒன்று சொல்கிறது ஓஹோ......(ஏனோ)