Adikuthu Kuliru Song Lyrics

அடிக்குது குளிரு பாடல் வரிகள்

Mannan (1992)
Movie Name
Mannan (1992) (மன்னன்)
Music
Ilaiyaraaja
Singers
Rajinikanth, S. Janaki
Lyrics
Vaali
ஹா…. அடிக்குது குளிரு….ஹோ… துடிக்குது தளிரு..
ஹா…அடிக்குது குளிரு… துடிக்குது தளிரு…
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பை போல உன் அன்பை தேடுது
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா
அடிக்குது குளிரு….
அது சரி…..அது சரி…..
துடிக்குது தளிரு…
இத பார்ரா…
முல்லை பூங்கொடி…. கொம்பை தேடுது
அப்டியா?…..
கொம்பை போல உன் அன்பை தேடுது
ஓஹோ…
வா கட்டபொம்மன் பேரா … கட்டழகு வீரா…
ஹாஹா …. எப்டி .. எப்டி?
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா…

அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ..ஆடி ரதம் அழைக்குது..
ஆஆஆஆ…ய்ய்……
கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ…ஆலிலை தவிக்குது
ஓஓ…ஹோ.
முத்தம் நூறு கேட்டு வாங்கவே… நாணமெனை தடுக்குது
அட்ர்ரா சக்கை!
பித்தம் ஏறி தூண்டில் மீனென.. நூலிடை துடிக்குது
இதெப்டி இருக்கு?
சுகமான கட்டில் நாடகம் … நீயும் நானும் ஆடலாம்
அக்…ஹா!
வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும் வெட்கம் இன்றி கூடலாம்.
அப்டி போடு!
உன்னை பார்த்து நான் .. சொக்கி போகிறேன்…
வா கட்டபொம்மன் பேரா… கட்டி கொள்ளு ஜோரா..
அடிக்குது குளிரு …
ஹா…. அது சரி … அது சரி…
துடிக்குது தளிரு…
அது ரொம்ப சரி… ரொம்ப சரி..

சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை …
மாலையிட கிடைக்கலாம்
இங்கே வந்து காலை மாலை தான்
சேலையை துவைக்கலாம்
என்னை போல ஒரு நல்ல மாப்பிள்ளை
வாய்ப்பதொரு அதிசயம்
என்னை நீயும் ஏற்றுக்கொண்டது
பாவையென் பாக்கியம்.
நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்…
இந்நாள் இங்கு தீர்ந்தது..
இல்லைய பின்ன?
மங்கை செய்த பூர்வ புண்ணியம்.. மன்னன் வந்து சேர்ந்தது
போச்சுடா…
உன்னை பார்த்து நான் … சொக்கி போகிறேன்..
வா கட்டபொம்மன் பேரா… கட்டி கொள்ளு ஜோரா..
அடிக்குது குளிரு….
ஆ..ஆ… அஹ்ஹஹா……ஹா……
என்னை மடக்குது தளிரு…
ம்ம்..ஹ்ம்… ஹஹ்ஹா..ஹா..
முல்லை பூங்கொடி….
ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்….
கொம்பை தேடுது..
ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்………………….
கொம்பை போல என்
ஹஹஹஹா………….
அன்பை தேடுது
வாரே…………வாரே………….வா.
கட்டி தங்க மேனி…. கட்டழகு ராணி..
அஹா.. ஆஹ்…..
கொட்டி பார்த்த தேனி…
ஆஆஆஆ……………….
கட்டில் பக்கம் வா நீ..
அஹ்ஹ்,…ஹா ஹா…
அடிக்குது குளிரு.