Kaala Magal Song Lyrics

கால மகள் கண் திறப்பாள் பாடல் வரிகள்

Anandha Jodhi (1963)
Movie Name
Anandha Jodhi (1963) (ஆனந்த ஜோதி)
Music
Viswanathan Ramamoorthy
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா


கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா


சின்னச் சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே
அமைதி கொள்ளடா
சின்னச் சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே
அமைதி கொள்ளடா

ஒரு பொழுதில் இன்பம் வரும்
மறு பொழுதில் துன்பம் வரும்
இருளினிலும் வழி தெரியும்
ஏக்கம் ஏனடா
தம்பி தூக்கம் கொள்ளடா
தம்பி தூக்கம் கொள்ளடா


கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
ஆஆஆஆஆஆ

கல்லிருக்கும் தேரைக்கெல்லாம்
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்
துணையிருந்த தெய்வம்
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம்
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்
துணையிருந்த தெய்வம்
நெல்லுக்குள்ளே மணியை
நெருப்பினிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
உனக்கு இல்லையாதம்பி
நமக்கு இல்லையா
தம்பி நமக்கு இல்லையா


கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா