Mudhal Ezhuthe Song Lyrics

முதல் எழுத்தே பாடல் வரிகள்

Vishnu (1995)
Movie Name
Vishnu (1995) (விஷ்ணு)
Music
Deva
Singers
S. P. Balasubramaniam
Lyrics
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
இதழ் எழுத்தே வேதமானால் இசை படித்தால் என்ன ஆகும்
மலர் தொடுத்தால் மாலை ஆனால் மனம் தொடுத்தால் என்ன ஆகும்
மணியே மணியே ஹோ ஹோ ஹோ
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்

கனி இதழில் காதல் ராகம் கனிவாய் அரங்கேறுமே
நுனி விரலில் நூறு பாவம் இனிதாய் ஸ்வரம் பாடுமே
முடிமுதலாய் பாதம் வரைக்கும் மூன்றுலகம் தோன்றுமே
அடி எடுத்தே பாட நினைத்தால் ஆசை என்னை மீருமே
மலரே மணமே மயங்கும் மனமே
மறந்தேன் எனை மறந்தேன் நானே
பிறந்தேன் உன் நினைவால் தானே

முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
இதழ் எழுத்தே வேதமானால் இசை படித்தால் என்ன ஆகும்
மலர் தொடுத்தால் மாலை ஆனால் மனம் தொடுத்தால் என்ன ஆகும்
மணியே மணியே ஹோ ஹோ ஹோ
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
தனியாய் இவள் வாடும்போது துணை நீ வரவேண்டுமே
பனியால் உடல் மூடும் போர்வை கனிவாய் தர வேண்டுமே
இடைவெளியே ஏது நமக்கு இறுதிவரை யோகமே
இடயிடயே ஏழு இசையால் இளைப்பாரிட வேண்டுமே
அழகே அமுதே அன்பின் விருந்தே
பரந்தேனடி வானம் வரயில்
விழுந்தேன் இந்த காதல் சிரயில்

முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
இதழ் எழுத்தே வேதமானால் இசை படித்தால் என்ன ஆகும்
மலர் தொடுத்தால் மாலை ஆனால் மனம் தொடுத்தால் என்ன ஆகும்
மணியே மணியே ஹோ ஹோ ஹோ
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
இதழ் எழுத்தே வேதமானால் இசை படித்தால் என்ன ஆகும்