Niththam Niththam Song Lyrics

நித்தம் நித்தம் நெல்லு சோறு பாடல் வரிகள்

Mullum Malarum (1978)
Movie Name
Mullum Malarum (1978) (முள்ளும் மலரும்)
Music
Ilaiyaraaja
Singers
Vani Jayaram
Lyrics
Gangai Amaran
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா 


பச்சரிசி சோறு உப்பு கருவாடு சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு 
குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா 


பாவக்கா கூட்டு பருப்போட சேத்து பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு 
சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு 
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா 
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமையா 
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா 


பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு
பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு 
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும் 
அதுக்கு என ஒலகத்துல இல்லவே இல்ல 
அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல 
இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு 
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க 
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா