Thudikkindrathe Indha Roja Song Lyrics

துடிக்கின்றதே இந்த ரோஜா பாடல் வரிகள்

Vettaiyaadu Vilaiyaadu (1989)
Movie Name
Vettaiyaadu Vilaiyaadu (1989) (வேட்டையாடு விளையாடு)
Music
Chandrabose
Singers
Lalitha Sagari
Lyrics
Vairamuthu
துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு
துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு
கனவு பிறந்தது கதவு திறந்தது
ஆசை மலர்ந்தது அழகு அவிழ்ந்தது..ஓஓஓ

துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு
துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு

தொடுக்காத பூவும் படுக்காத பாயும்
கறக்காத சீம்பாலும் வீண் தானய்யா
உரிக்காத வாழை பிரிக்காத சேலை
கசக்காத தேன் ரோஜா நான்தானய்யா

இடை தீண்டும் வேளை இடைவேளை இல்லை
எடுக்கவா கொடுக்கவா இரண்டிலும் இன்பம் வேறு

ஓஓ துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு
துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு

மதுக் கோப்பை ஏந்து மலர்க்காட்டில் நீந்து
துளைக்கின்ற துன்பங்கள் தூளாகுமே
உனக்கென்று கொஞ்சம் உலகத்தில் வாழு
உண்டான காயங்கள் பூவாகுமே

கலக்கங்கள் வேண்டாம் குழப்பங்கள் வேண்டாம்
நினைத்ததை முடிக்கவா வரிப்புலி போலே வா வா

ஓஓ துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு
துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு
கனவு பிறந்தது கதவு திறந்தது
ஆசை மலர்ந்தது அழகு அவிழ்ந்தது..ஓஓஓ

ஓஓ துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு
துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு