Kadavul Seitha Paavam Song Lyrics

கடவுள் செய்த பாவம் பாடல் வரிகள்

Nadodi (1966) (1966)
Movie Name
Nadodi (1966) (1966) (நாடோடி)
Music
M. S. Viswanathan
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ – இந்த
மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ – இந்த
மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்

பொருளேதுமின்றி கருவாக வைத்து
உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்
பொருளேதுமின்றி கருவாக வைத்து
உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ – இந்த
மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய்ப் போன இந்த பூமியிலே
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய்ப் போன இந்த பூமியிலே

முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் ம் காரியமானதும் மாறும்

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ – இந்த
மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்

கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி
கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்?
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்?
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் உலகம் உருப்படியாகும்

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ – இந்த
மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்