Sangeetha Vanil Song Lyrics

சங்கீத வானில் பாடல் வரிகள்

Chinna Poove Mella Pesu (1987)
Movie Name
Chinna Poove Mella Pesu (1987) (சின்ன பூவே மெல்ல பேசு)
Music
S. A. Rajkumar
Singers
S. P. Balasubramaniam, Vani Jayaram
Lyrics
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே


ஹா..ஆ..ஆ..ஆ.
ஆனந்த ராகங்களில்...
நான் ஆலாபனை செய்கிறேன்..

வா..ஆ..ஆ..ஆ.ஆ...
நான் உந்தன் கீதம் தன்னை
ஆராதனை செய்கிறேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே

கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே

ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே


ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
பொன்மாலை வேளைகளில்...
உன் வாசல் நான் தேடினேன்

ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
கண்ணென்னும் ஓடங்களில்
கரை தேடி நான் ஓடினேன்

கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வாட்டுதே

கண் மைகளில் சுகம் வளர்கின்றதே
உன்னில் தினம் உடல் கரைகின்றதே

இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே

இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்

என் காதல் பூ மயிலே