Nandri Sollave Song Lyrics

நன்றி சொல்லவே பாடல் வரிகள்

Udan Pirappu (1993)
Movie Name
Udan Pirappu (1993) (உடன் பிறப்பு)
Music
Ilaiyaraaja
Singers
S. P. Balasubramaniam, Swarnalatha, Vaali
Lyrics
Vaali
பெ -குழு : சதமானம் பவதி சதாயஷ் குருஸஷ் சதேந்திரிய ஹ
ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி.. (இசை)

பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

***

ஆண் : ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே (இசை)

பெண்குழு : சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்

***

ஆண் : வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
பெண் : திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே
ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே