Song lyrics
Kaddu Thiranthae
காடு திறந்தே கிடக்கின்றது
10775 views
Singer · Hariharan, Sadhana Sargam
Lyrics · Vairamuthu
The lyrics
காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது அடாடா..
நெஞ்சில் வரும் காதல் வலி
பூவில் ஒரு சூறாவளியோ....ஓ...ஓ....
நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூல் கொண்டதோ
உன்னை விட்டு உடல் மீளவில்லை
என் கால்கள் வேர் கொண்டதோ
பூமிக்கு வந்த பனித்துளி நான்
சூரியனே என்னைக் குடித்து விடு
யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன்
பனித்துளியே என்னை அணைத்து விடு
உறவே உயிரே உணர்வே........
நெஞ்சில் வரும் காதல் வலி
பூவில் ஒரு சூறாவளியோ....ஓ...ஓ....
சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி
பேரின்பம் நாம் அடைவோம்
கால் தடங்கள் அற்ற பூமியிலே
காற்றாக நாம் நுழைவோம்
சித்திரை மாதத்தை நான் அணைத்து
கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்
மார்கழி மாதத்தை நான் எரித்து
முன்பனிக் காலத்தில் அனல் கொடுப்பேன்
அடியே...சகியே....சுகியே
நெஞ்சில் வரும் காதல் வலி
பூவில் ஒரு சூறாவளியோ....ஓ...ஓ....
காடு திறந்தே கிடக்கின்றது......
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Alwarpetai Aaluda ஆழ்வார்பேட்ட ஆளுடா
Sung by Kamal Haasan
-
Kallakapovathu Yaaru கலக்கப் போவது யாரு
Sung by Kamal Haasan, Sathyan
-
Kaddu Thiranthae காடு திறந்தே கிடக்கின்றது
Sung by Hariharan, Sadhana Sargam
-
Sakalakala Doctor சகலகலா டாக்டர் டாக்டர்
Sung by Bharathwaj, Arjun
-
Seena Thana சிரிச்சி சிரிச்சி வந்தான்
Sung by Grace Karunas
-
Pathukullae Number பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
Sung by KK, Shreya Ghoshal