Aadhisayam Paarthen artwork

Song lyrics

Aadhisayam Paarthen

தஞ்சமென்று வந்தவரை

3275 views

Singer · Seerkazhi Govindarajan

The lyrics

தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து
அறங் காக்கும் மக்களிடம்
பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே-
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே

மூணுபக்கமும் கடல் தாலாட்டுது-
தன்மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்துவந்து நிலத்தை நீராட்டுது-
பல வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே-
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே


மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு-
அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு,
மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே-
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே



அங்கே- சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும்-
தழுவி சந்தமிசைத்துத்
தென்றல் தவழ்ந்து வரும் செந்தாழை மலர்தொட்டு
மணம்சுமந்து வரும்
இங்கே- தங்கிட நிழலுமில்லை
பொங்கிடக் கடலுமில்லை-
சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை
நம்மை தழுவிடத் தென்றலெதும் வருவதில்லை.
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kalai Arasi

Keep listening

More from this movie

  1. Aasai Vaikkira Idam ஆசை வைக்கிற

    Sung by P. Bhanumathi, Jikki

  2. Aadhisayam Paarthen தஞ்சமென்று வந்தவரை

    Sung by Seerkazhi Govindarajan

  3. Aadhisayam Paarthen அதிசயம் பார்த்தேன்

    Sung by Seerkazhi Govindarajan

  4. Endrum Illaamal என்றும் இல்லா

    Sung by P. Leela

  5. Ninaikkum Pothu நினைக்கும்போது நெஞ்சும்

    Sung by P. Bhanumathi