Thaai Thindra Mannae artwork

Song lyrics

Thaai Thindra Mannae

தாய் தின்ற மண்ணே

53095 views

Singer · Vijay Yesudas, Nithyasree Mahadevan, Shri Krishna

Lyrics · Vairamuthu

The lyrics

தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
நெல்லாடிய நிலம் எங்கே சொல்லாடிய அவை எங்கே
வில்லாடிய களம் எங்கே கல்லாடிய சிலை எங்கே
தாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே

கயல் விளையாடும் வயல்வெளி தேடி
காய்ந்து கழிந்தன் கண்கள்
காவிரி மலரின் கடி மனம் தேடி கருகி முடிந்தது நாசி
சிலை வடிமேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்
புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக்கறி பொறிப்பதுவோ
காற்றை குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பதுவோ… ஓ…
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ மன்னன் ஆளுவதோ… ஓ… (தாய்)

நொறுங்கும் உடல்கள் பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ
தூதோ முன் வினை தீதோ
களங்களும் அதிர களிருகள் பிளிர
சோழம் அழைத்து போவாயோ
தங்கமே எம்மை தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அது வரை அது வரை… ஓ…ஓ...ஓ....
தமிழன் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே அழாதே
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உரையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடு அழும் யாழே அழாதே (நெல்லாடிய)

தாய் தின்ற மண்ணே…. இது பிள்ளையின் கதறல்……
ஒரு பேரரசன் புலம்பல்…
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aayirathil Oruvan

Keep listening

More from this movie

  1. Un Mela Aasadhaan உன் மேல ஆசை தான்

    Sung by Dhanush, Aishwarya Dhanush, Andrea Jeremiah

  2. Indha Padhai இந்தப் பாதை எங்குப்போகும்

    Sung by G. V. Prakash Kumar

  3. Nelladiya Niamenge நெல்லாடிய நிலம்மெங்கே

    Sung by Karthik, Andrea Jeremiah

  4. Maalai Neram மாலை நேரம் மழைத்தூரும்

    Sung by Andrea Jeremiah G. V. Prakash Kumar

  5. Pemmane பெம்மானே பேருலகின்

    Sung by P. B. Sreenivas, Bombay Jayashri

  6. Thaai Thindra Mannae தாய் தின்ற மண்ணே

    Sung by Vijay Yesudas, Nithyasree Mahadevan, Shri Krishna