Kalaiyodu Kalandhadhu Unmai Song Lyrics

கலையோடு கலந்தது உண்மை பாடல் வரிகள்

Mannadhi Mannan (1960)
Movie Name
Mannadhi Mannan (1960) (மன்னாதி மன்னன்)
Music
Viswanathan Ramamoorthy
Singers
M. L. Vasanthakumari
Lyrics
Kannadasan
கலையோடு கலந்தது உண்மை
நான் கலையோடு கலந்தது உண்மை
கற்புக் கனலோடு பிறந்த
என் தமிழாளும் பெண்மை 

கலையோடு கலந்தது உண்மை
நான் கலையோடு கலந்தது உண்மை
கற்புக் கனலோடு பிறந்த
என் தமிழாளும் பெண்மை

அழியாத நீதி நெறி விளையாடும் காட்சி
நிலையான சோழ மன்னன் எழில் மேவும் ஆட்சி
ஆடல் கணிகை பெற்ற மணிமேகலை
தனைத் தேடித் திரிந்த ஒரு சோழன் பிள்ளை
நாடும் வழி மறந்து தவறு செய்தான்
நகரத்து மாந்தர் கையில் உயிர் துறந்தான்

வெற்றி சேனையின் கொற்றக் காவலன்
வீணர்கள் பாதையை நாடுவதோ?
மான மனிதர் வாழும் உலகில்
மங்கை உலகம் பொங்கி அழுது வாடுவதோ?
கதி மாறி வழி மாறி விளையாடும்
சதிகாரர் வாழ்வு நிலையாகுமோ?


பற்றிப் பெருகும் கற்புக் கனலில்
அரசர் யாவரும் அழிவதே அறமோ?
கருவூரை வளைத்து அடியோடு எரிக்கும்
காலம் அறியும் விதியிலையோ? 

கலையோடு கலந்தது உண்மை
நான் கலையோடு கலந்தது உண்மை
கற்புக் கனலோடு பிறந்த
என் தமிழாளும் பெண்மை