Aadadha Manamum Undo Song Lyrics

ஆடாத மனமும் உண்டோ பாடல் வரிகள்

Mannadhi Mannan (1960)
Movie Name
Mannadhi Mannan (1960) (மன்னாதி மன்னன்)
Music
Viswanathan Ramamoorthy
Singers
T. M. Soundararajan
Lyrics
A. Maruthakasi
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ

நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ

வாடாத‌ ம‌ல‌ர்போலும் விழி பார்வையில்
கை வ‌ளையோசை த‌ருமின்ப‌ இசை கார்வையில்
வாடாத‌ ம‌ல‌ர்போலும் விழி பார்வையில்
கை வ‌ளையோசை த‌ருமின்ப‌ இசை கார்வையில
ஈடேதும் இல்லாத‌ கலைச் சேவையில்
த‌னி இட‌ம் கொண்ட‌ உமைக் கண்டும் இப்பூமியில்
ஈடேதும் இல்லாத‌ கலைச் சேவையில்
த‌னி இட‌ம் கொண்ட‌ உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ

இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும்
குர‌லில் குயில் அஞ்சும் உனைக் காணவே
இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும்
குர‌லில் குயில் அஞ்சும் உனைக் காணவே
ப‌சும் தங்கம் உம‌து எழில் அங்க‌ம்
அதன் அசைவில் பொங்கும் நய‌ம் காணவே
ப‌சும் தங்கம் உம‌து எழில் அங்க‌ம்
அதன் அசைவில் பொங்கும் நய‌ம் காணவே


முல்லைப்பூவில் ஆடும் க‌ரு வ‌ண்டாக‌வே
முகில் முன்னே ஆடும் வ‌ண்ண‌ ம‌யில் போலவே
முல்லைப்பூவில் ஆடும் க‌ரு வ‌ண்டாக‌வே
முகில் முன்னே ஆடும் வ‌ண்ண‌ ம‌யில் போல‌வே
அன்பை நாடி உந்த‌ன் அருகில் வந்து நின்றேன்
இன்ப‌ம் என்னும் பொருளை இங்கு க‌ண்டேன்
த‌ன்னை ம‌ற‌ந்து உள்ள‌ம் க‌னிந்து
இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்

தேனாறு பாய்ந்தோடும் க‌லைச்செல்வ‌மே
தரும் திகட்டாத‌ ஆனந்த நிறை த‌ன்னிலே
தேனாறு பாய்ந்தோடும் க‌லைச்செல்வ‌மே
தரும் திகட்டாத‌ ஆனந்த‌ நிறை த‌ன்னிலே
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
ஆடாத மனமும் உண்டோ