Kaalaiyile Maalai Song Lyrics

காலையிலே மாலை பாடல் வரிகள்

Chithirayil Nilachoru (2013)
Movie Name
Chithirayil Nilachoru (2013) (சித்திரையில் நிலாச்சோறு)
Music
Ilaiyaraaja
Singers
Lyrics
காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது
இனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான் இனி சரணமென
இந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல

காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது

கண்களை நான் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தேன்
கண் திறந்தேன் என்ன அழகு
எண்ணத்தை நான் எப்படியோ ஓடவிட்டேன்
இன்று அதில் நல்ல தெளிவு
மூங்கில் காடு முழுசா பாடும்
புல்லாங்குழலாய் மாறும் போது
சித்திரம் எழுதும் கண்மணி அழகு
நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு
உனது இரு விழிகளில் கதை எழுது

காலையிலே மாலை ….

இன்று முதல் வாழும் வரை நான் உனக்கு
இந்த வரம் வேண்டும் எனக்கு
சிந்தனையில் வந்து வந்து போகும் உனக்கு
சிற்றிடையில் வேலை இருக்கு
எனது உனது மனது நமதாக
விருந்து கலந்து விருப்பம் உனதாக
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு

காலையிலே மாலை ….