Kallale Senju Vecha Song Lyrics

கல்லாலே செஞ்சு பாடல் வரிகள்

Chithirayil Nilachoru (2013)
Movie Name
Chithirayil Nilachoru (2013) (சித்திரையில் நிலாச்சோறு)
Music
Ilaiyaraaja
Singers
Lyrics
கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ 
எனக்காக மண்ணில் வந்த 
எனக்காக இந்த மண்ணில் வந்த 
என் தங்கமே வைரமே செல்லமே...
கல்லாலே செஞ்சு வெச்ச சாமி இல்ல நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ 

கன்னுகுட்டி நீ துள்ளி ஓடுனா 
கண்ணு பட்டிடும் சொன்ன சொல்ல கேளும்மா 
தேரு வந்து நின்னா கூட நீ அழகு 
மின்னல் வந்து போனா கூட நீ தான் அழகு 
அம்மான்னு உன்ன நானும் கூப்பிடுவேன் 
எங்க அம்மாவ அப்போ அப்போ நெனச்சுக்குவேன் 
அம்மான்னு உன்ன நானும் கூப்பிடுவேன் 
எங்க அம்மாவை அப்போ அப்போ நெனச்சுக்குவேன் 
நீ செய்கூலி சேதாரம் இல்லாத 
என் தங்கமே வைரமே செல்லமே....

கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ 

மண்ணில் விழுந்த மழை துளி நீ 
என் கண்ணில் இருக்கும் கருவிழி நீ 
பொட்டு வெச்ச சித்திரமே நீ எனக்கு போதும் 
வட்ட நிலா நீ தான் என்று உன் அழக பாடும் 
யானை மேல நீ அமர்ந்து வலம் வரணும் 
நான் எப்ப எப்ப கேட்டாலும் நீ வரம் தரனும் 
நீ வேணும் நிழலாக 
வாழோணும் தங்கமே வைரமே செல்லமே...

கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ 
எனக்காக மண்ணில் வந்த 
எனக்காக இந்த மண்ணில் வந்த 
என் தங்கமே வைரமே செல்லமே...
ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ..
ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ..
ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ..