Thaamarai Poo Kulatthilae Song Lyrics

தாமரைப் பூ குளத்திலே பாடல் வரிகள்

Muradan Muthu (1964)
Movie Name
Muradan Muthu (1964) (முரடன் முத்து)
Music
T. G. Lingappa
Singers
Lyrics
Kannadasan
தாமரைப் பூ குளத்திலே 
சாயங்கால பொழுதிலே
தாமரைப் பூ குளத்திலே 
சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே 
கூட வந்தான் பின்னாலே
குளிக்க வந்தேன் தன்னாலே 
கூட வந்தான் பின்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா ( இசை )
மல்லிகைப் பூ முகத்திலே 
மாம்பழத்து உதட்டிலே
மல்லிகைப் பூ முகத்திலே 
மாம்பழத்து உதட்டிலே
பள்ளம் போட வந்தானே 
பரிசு ஒண்ணு தந்தானே
பள்ளம் போட வந்தானே 
பரிசு ஒண்ணு தந்தானே
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா

தூங்கும் போது சிரிக்கிறான்
தூக்கத்தையே கெடுக்கிறான்
ஒஹோஹோ... ஒஹோஹோ... 
தூங்கும் போது சிரிக்கிறான்
தூக்கத்தையே கெடுக்கிறான்
ஏங்க விட்டு இளைக்க விட்டான் தன்னாலே
இப்போ இடையைப் பாத்து 
மனசை விட்டான் முன்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா

பருவம் காக்கும் முந்தானே 
பறக்கும் போது வந்தானே
கர்வம் எல்லாம் விட்டு விட்டு நின்றானே
உன் கைகளுக்குள் 
பிள்ளையாகிக் கொண்டானே
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா

இருவர் மேடை இட்டு கோலம் இட்டு 
மேள தாள விருந்து வச்சி ( இசை )
மேடை இட்டு கோலம் இட்டு 
மேள தாள விருந்து வச்சி
மாலையிட்டு தாலி கட்டிக் கொள்வோமா
அந்த மயக்கத்திலே 
முழுக் கதையும் சொல்வோமா
பறந்திடலாமா ஒன்றாய் கலந்திடலாமா
பறந்திடலாமா ஒன்றாய் கலந்திடலாமா
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே