Sevvandhi Poo Chendu Song Lyrics

செவ்வந்திப் பூ செண்டு பாடல் வரிகள்

Muradan Muthu (1964)
Movie Name
Muradan Muthu (1964) (முரடன் முத்து)
Music
T. G. Lingappa
Singers
Lyrics
Kannadasan
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும் 
கோழி குஞ்சு

செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும் 
கோழி குஞ்சு

அன்னையோடு இரை எடுக்கும் கோழி குஞ்சு
அன்னையோடு இரை எடுக்கும் கோழி குஞ்சு
நல்ல அன்புமிக்க பிள்ளை அந்த கோழி குஞ்சு

செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும் 
கோழி குஞ்சு


தாயை விட்டு ஒரு பொழுதும் தனித்திருக்காது
அண்ணன் தங்கயரை மறந்து விட்டு 
இரை எடுக்காது ( இசை )

தாயை விட்டு ஒரு பொழுதும் தனித்திருக்காது
அண்ணன் தங்கயரை மறந்து விட்டு 
இரை எடுக்காது 
வாயில்லாத கோழி குஞ்சு வார்த்தை சொல்லாது
வாயில்லாத கோழி குஞ்சு வார்த்தை சொல்லாது
தன்னை வளர்த்தவரை எந்த நாளும் 
பிரிந்து விடாது

செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும் 
கோழி குஞ்சு


அன்பிருக்கும் வீட்டினிலே ஆசை இருக்கும்
நல்ல ஆசையுள்ள நெஞ்சினிலே 
பாசம் இருக்கும் ( இசை )

அன்பிருக்கும் வீட்டினிலே ஆசை இருக்கும்
நல்ல ஆசையுள்ள நெஞ்சினிலே 
பாசம் இருக்கும் 
பாசமுள்ள குடும்பத்திலே தெய்வம் இருக்கும்
பாசமுள்ள குடும்பத்திலே தெய்வம் இருக்கும்
ஒரு பகை வராமல் அனைவரையும் 
காத்து இருக்கும்

செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும் 
கோழி குஞ்சு

செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும் 
கோழி குஞ்சு