Atthuvaana Kaatukku Song Lyrics

அத்துவான காட்டுக்கு பாடல் வரிகள்

Idam Porul Yeval (2015)
Movie Name
Idam Porul Yeval (2015) (இடம் பொருள் ஏவல்)
Music
Yuvan Shankar Raja
Singers
Yuvan Shankar Raja
Lyrics
Vairamuthu
அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா

கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா

ஊரோ உறவோ வறண்டே கெடக்கு
உசுரா நெனைக்க மழையும் இருக்கு

பெத்தவ இல்லயே மத்தவ இல்லயே
இவ சாமி சொல்லி வந்தவா

அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா

கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா

அவ என்ன தாயா நீ என்ன மகனா
அடட பாசம் துளிர் விடுமே

கருங்கல் இடுக்கில் காக்கை இட்ட
எச்சத்தில் ஆல மரமே வருமே

தேசம் விட்டு போகும் போதும்
வானம் என்ன நீளம் தான்

பாசம் உள்ள சேலையில் எல்லாம்
தாய் பாலின் வாசம் தான்

பாச முழுகயில் பாசம் இனிக்குதே
ஆத்தா வாசமோ சோத்துல வீசுதே

இடம் பொருள் ஏவல் அமைவதை பொறுத்தே
உறவும் பிரிவும் ஏற்படுமே

யாரு மற்ற காட்டில் பேச்சுத்துணை யாரு
சிட்டுக்குருவி போதுமே

ஒத்த மரமாகி போன இத்துப்போன பொம்பள
மகிழ்ந்து தான் பூத்து போனா

மகன் வந்த தெம்புல நஞ்சு போன
வாழ்க்கை சொந்தமே தேடுமே
பிஞ்ச கொடையும் மழைக்கு போதுமே

அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா

கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா