Ragasiya Kanavugal Song Lyrics

ரகசிய கனவுகள் பாடல் வரிகள்

Bheemaa (2008)
Movie Name
Bheemaa (2008) (பீமா)
Music
Harris Jayaraj
Singers
Thamarai
Lyrics
Thamarai
பெண்: ரகசிய கனவுகள் ஜல்.. ஜல்..
என் இமைகளை கழுவுது சொல்.. சொல்..
இளமையில் இளமையில் ஜில்.. ஜில்..
என் இருதயம் நழுவுது செல்.. செல்..

ஆண்: முதல் பிழை போல் மனதினிலே....
விழுந்தது உன துருவம்... ஓ....
உதடுகளால் உனை படிப்பேன்....
எரிந்திடு அரை நிமிடம்...
தொலைவதுபோல் தொலைவதுதான்..
உலகில் உலகில் புனிதம்...

குழு: இறகே இறகே மயிலிறகே.. வண்ண மயிலிறகே.. வந்து தொடு அழகே...
தொட தொட பொழிகிற சுகம் சுகமே..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...
இறகே இறகே மயிலிறகே.. வண்ண மயிலிறகே.. வந்து தொடு அழகே...
தொட தொட பொழிகிற சுகம் சுகமே..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...

(இசை...)

பெண்: மறுபடி ஒருமுறை பிறந்தே..னே...
விரல் தொட புருவமும் சிவந்தே..னே...
ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ...
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ...

ஆண்: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல.. எனை சூழ
நரம்புகளோடு குறும்புகளாடும்.. எழுதிய கணக்கு...
எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு... (ரகசிய கனவுகள்...)

(இசை...)
ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச...
உனை பேச..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச...
அனல் வீச...
ஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ....
தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ....

பெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்...
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...
ஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்...

ஆண்: ரகசிய கனவுகள் ஜல் ஜல்....
உன் இமைகளை கழுவுது சொல் சொல்...
இளமையில் இளமையில ஜில் ஜில்...
என் இருதயம் நழுவுதே செல் செல்

பெண்: குயிலிணமே.. குயிலிணமே.. எனக்கொரு சிறகு கொடு..
முகிலிணமே.. முகிலிணமே.. முகவரி எழுதிக் கொடு...
அவனிடமே... அவனிடமே... எனது கனவை அனுப்பு...

குழு: இறகே இறகே மயிலிறகே...
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே...
தொட தொட பொழிகிற சுகம் சுகமே...
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...
இறகே இறகே மயிலிறகே....
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே...
தொட தொட பொழிகிற சுகம் சுகமே...
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே..
இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே...
தொட தொட பொழிகிற சுகம் சுகமே...
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...
இறகே இறகே மயிலிறகே...
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே...
தொட தொட பொழிகிறற சுகம் சுகமே...
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே