Kangalin Vaarthaigal Song Lyrics

கண்களின் வார்த்தைகள் பாடல் வரிகள்

Kalathur Kannamma (1960)
Movie Name
Kalathur Kannamma (1960) (களத்தூர் கண்ணம்மா)
Music
R. Sudharsanam
Singers
A. M. Rajah, P. Susheela
Lyrics
Kannadasan
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா
தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா
ஏழை மனமே பொல்லாத மனிதர்
இவரை நம்பாதே இவரை நம்பாதே
தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும்
சிலையை மறந்தே ஓடினார்
உன்னை மறவாமலே வந்த துணை நானன்றோ
உன்னை மறவாமலே வந்த துணை நானன்றோ

அ….
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

வண்ணக்கொடியே வண்டாடும் மலரே
எண்ணம் இருந்தும் நாணமா
பாவலர் தமிழின் பண்பான காதல்
மௌன கலையன்றோ
பெண்மை மனது நிலையன்றோ
பாடும் மனதின் பண்பான ஆசை
பார்வை வழியே தோன்றுமே
இனி வரும் நாளெல்லாம் நம் திருநாள் அன்றோ
இனி வரும் நாளெல்லாம் நம் திருநாள் அன்றோ

அ….
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ