Yaarai Enge Vaipadhendru Song Lyrics

யாரை எங்கே வைப்பது பாடல் வரிகள்

Bale Pandiya (1962) (1962)
Movie Name
Bale Pandiya (1962) (1962) (பலே பாண்டியா)
Music
Viswanathan Ramamoorthy
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே 

யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் 
பேதம் புரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் 
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி 
பிழைக்க முடியல்லே
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் 
பேதம் தெரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி 
பிழைக்க முடியல்லே
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் 
பேதம் தெரியல்லே பேதம் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் 
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே

நானி இருக்கும் இடத்தினிலே 
அவன் இருக்கின்றான்
அவன் இருக்கும் இடத்தினிலே 
நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் 
அதுவும் தெரியல்லே
இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் 
பேதம் தெரியல்லை
அட என்னத்தச் சொல்வேண்டா 
தம்பி என்னத்தச் சொல்வேண்டா 

தம்பி ஒருவன் வெளியில் நின்று 
காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து 
கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே 
கலங்கி நிக்குதடா
அட உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு 
வெளியில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா 
தம்பி என்னத்தச் சொல்வேண்டா 

யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் 
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே

மூடருக்கும் மனிதர் போல 
முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் 
நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும் 
உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து 
பாடிச் செல்லுமடா
அட என்னத்தச் சொல்வேண்டா 
தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா 

யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் 
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே