Naan Enna Solliviten Song Lyrics

நான் என்ன சொல்லிவிட்டேன் பாடல் வரிகள்

Bale Pandiya (1962) (1962)
Movie Name
Bale Pandiya (1962) (1962) (பலே பாண்டியா)
Music
Viswanathan Ramamoorthy
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்...

செம் மாம்பழம் போலே 
கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே 
இதழ் கனிந்து விட்டதடி 

செம் மாம்பழம் போலே 
கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே 
இதழ் கனிந்து விட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி
நெஞ்சில் அன்றில்லாத நாணம் இன்று 
எங்கு வந்ததடி
என்ன... என்ன... என்ன... 

நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்...

மலர் பஞ்சணை மேலே 
வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ 
அதை நினைவில் வைத்தாயோ 

மலர் பஞ்சணை மேலே 
வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ 
அதை நினைவில் வைத்தாயோ 
கண்டு ஏங்குகின்றாயோ இன்று தூங்குகின்றாயோ
நாம் பழகப் போகும் அழகை எல்லாம் 
படம் பிடித்தாயோ
என்ன... என்ன... என்ன... 

நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்...