Ubakaram Seibavarukke Song Lyrics

உபகாரம் செய்தவர்க்கே பாடல் வரிகள்

Manthiri Kumari (1950)
Movie Name
Manthiri Kumari (1950) (மந்திரி குமாரி)
Music
G. Ramanathan
Singers
T. M. Soundararajan
Lyrics
A. Maruthakasi
உபகாரம் செய்தவர்க்கே
அபகாரம் செய்ய எண்ணும்
முழு மோசக்காரன்
தானே
முடிவிலே
நாசமாவான் ஆ ஆ ஆ

அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே

தேகம் கண்டு மயங்கியே
வீணாக ஆசை கொண்டு
மோசமும் போன பின்னால்
மனவேதனை அடைவதாலே
லாபம் என்ன

பாலை ஊற்றி பாம்பை நாம்
வளர்த்தாலும் நம்மையே
கடிக்கத்தானே வரும் அதை
அடித்து கொல்ல நேருமே

அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே