Aasai Aasaiyai Song Lyrics

ஆசை ஆசையாய் இருகிறதே பாடல் வரிகள்

Aanandham (2001)
Movie Name
Aanandham (2001) (ஆனந்தம்)
Music
S. A. Rajkumar
Singers
K. J. Yesudas
Lyrics
ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்


ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே



நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பனிவாடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்திருபோம்
அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே


ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே



பல நூறு வர்ணம் ஒன்றாக சேரும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வதை போல வாழ்ந்திருபோம்
எங்களுக்குள்ளே வளைந்திருபோம் நாணலை போல்தானே
ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல்தானே
அடை மழையாக பெய்யும் சந்தோசம்


ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்