Kalyaana Vaanil Pokum Song Lyrics

கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம் பாடல் வரிகள்

Aanandham (2001)
Movie Name
Aanandham (2001) (ஆனந்தம்)
Music
S. A. Rajkumar
Singers
Sujatha Mohan, Unni Menon
Lyrics

ஹேய்... ஜொலிக்க ஜொலிக்க
ஒரு ஜோடி புறா வந்திருச்சு...
ஸரி ஸத பத ஸரி... ஸரி ஸத பத ஸரி...
சாமந்தி வாசத்தில் ரெண்டும்
சந்தனத்தை பூசிக்கிச்சு...
ஸரி ஸத பத ஸரி... ஸரி ஸத பத ஸரி...

கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
அழியாதது காதல் கோலம்
ஓயாமலே கேட்கும் காதில் மேள நாயனம்

நீயோ ஏற்றும் தீபத்தில் கார்த்திகை நாளும்
வீட்டுக்குள் வர வேண்டும்
எந்தன் தோட்டது பூவுக்கும் பூக்கும் ஆசை
உன்னால் எழ வேண்டும்.... (கல்யாண)

தண்ணிர் குடத்தில் ஞாபகம் நிரப்பி
வாசல் எங்கும் தெளிப்பேனே
நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே
யாரோ போல ரசிப்பேனே

ஜீவநதி ஏங்கும்......ஏங்கும்....
அடி மனசு பொங்கும்
நெஞ்சுக்குழி எங்கும்.....எங்கும்....
உன் நினைவு தங்கும்
நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு
முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன் (கல்யாண)

மனைவியான நிமிசத்திலிருந்து
உன்னை பேர் சொல்லி அழைப்பேனே
தூங்கும் போதும் உன் பேர் கேட்டால்
துள்ளி எழுந்து பார்ப்பேனே

குளியலறை பக்கம்.....பக்கம்...
தலை துவட்ட வருவேன்
படுக்கையினில் மிச்சம்.....மிச்சம்...
வைத்து அங்கே தருவேன்
வளையோசையால் சைகை காட்டுவேன்
தயங்காமலே தேவை யாவும் கேட்பேன் (கல்யாண)