kaNNE unnaal naan Song Lyrics

கண்ணே கண்ணே பாடல் வரிகள்

Ambikapathy  (1957) (1957)
Movie Name
Ambikapathy (1957) (1957) (அம்பிகாபதி)
Music
G. Ramanathan
Singers
N. S. Krishnan, T. A. Madhuram
Lyrics
கண்ணே கண்ணே...
கண்ணே உன்னால் நான் அடையும் 
கவலை கொஞ்சமா
என் கவலை கொஞ்சமா 
அதை கண்டு சும்மா இருக்க உனக்கு 
கல்லு நெஞ்சமா
கண்டு சும்மா இருக்க உனக்கு 
கல்லு நெஞ்சமா

ஏய்...

ஏ உ ஏய்
ஆஹ ஏ ஏய் ஆ ஏய் ஆ ஏய் ஏய் ஏய் ஏ ஓ

ஏன்ய்யா என்னது கண்ணே கிண்ணே சொல்றீங்க

அட உன்ன இல்லம்மா
என் கண்ண பத்தி பாடுறேன்
ரெண்டு நாளா தூக்கமே இல்ல
சதா அரிக்குது வெண்ணீரா கொட்டுது
அது தான் வேற ஒண்ணும் இல்ல

ஓஹோ அப்ப பாடு

தங்கமே தங்கமே...
தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ
என்று தான் பெறுவேனோ
என் அங்கம் குளிர வாரி அணைத்து 
அகம் மகிழ்வேனோ
என் அங்கம் குளிர வாரி அணைத்து 
அகம் மகிழ்வேனோ

தா

தா... ன்தா.... ஐயோ ன்தா அட ன்தா
ஐயோ இன்தா இன்தா த... மத தா வ தா

இந்தாங்கையா
இப்போ தங்கமேன்னு சொன்னது என்ன தானே

ஐயையோ ஐயையோ ஐயையோ 
இது என்னடா இது இத பாரும்மா 
இத இந்த பாட்டு பாட்றேன் பாரு
அதுல பித்தள காசு 
வெள்ளி காசு வரைக்கும் வந்திருக்கு
தங்கம் கிடைக்கல அப்படி தங்கம் வந்திருச்சின்னா
தங்கமே அதான்

ம்... ம்... ம்...
பாடுங்க பாடுங்க

தேனே தேனே...
தேனே உன்னே தேடித் தேடி நான் அலைந்தேனே
நான் அலைந்தேனே
நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும் 
தொடப் பயந்தேனே
நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும் 
தொடப் பயந்தேனே

மொகரையப் பாரு
ஐயையோ மொகரையப் பாரா
மொகரையப் பாரு ஆஹா மொகரையப் பாரு
ஓஹோ மொகரையப் பாரு 
மொகம மொகம மொகரையப் பாரு
சரி ஓ சரி

இந்தாங்கைய்யா
இன்னமே ஒண்ணும் மாத்த முடியாது
சத்தியமா சொல்லுங்க 
இப்ப தேனேன்னு என்ன தானே சொன்னீங்க

அது உன்னையில்லமா இந்த
எனக்கு ஒடம்பு சரியில்ல
வைத்தியரு ஒரு பஸ்பம் குடுத்திருக்காரு
அத கொளச்சி சாப்டரதுக்கு தேன் வேணும்

அது சரி எதிரில் இருந்தும் தொடப் பயந்தேன்னு
சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தமா

எதிர்ல இருக்கு தொட முடியல அதான்

என்னது 

இங்க இல்ல 
தோட்டத்துல ஒரு மரத்துல 
உச்சீல இருக்கு தேன் கூடு
அது தொட போனா அடிக்குமோ 
இல்லல்ல கொத்துமோ
அப்படினு பயமா இருக்கு

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா என்னா மூளை