Kudagu Malai Song Lyrics

குடகு மலை காற்றில் பாடல் வரிகள்

Karakattakaran (1989)
Movie Name
Karakattakaran (1989) (கரகாட்டகாரன்)
Music
Ilaiyaraaja
Singers
K. S. Chithra, Mano
Lyrics
Gangai Amaran
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தெம்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்காதோ என் பாட்டே
உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன்
பூ பூத்த சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத தாகம் கொண்டு
பாடும் பாட்டு
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி

மறந்தால் தானே நெனைக்கனும் மாமா
நினைவே நீதானே நீதானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நெனச்சு தவிசேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெக்கு காத்தோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்ன என்ன ஒன்னாக நின்ன என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்ன எண்ணி துடிச்சாளே இந்த கன்னி
வா மாமா