Pallaandu Pallaandu Song Lyrics

பல்லாண்டு பல்லாண்டு பாடல் வரிகள்

Aalvar (2007)
Movie Name
Aalvar (2007) (ஆழ்வார்)
Music
Srikanth Deva
Singers
P. Unnikrishnan
Lyrics
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு
அடியோனோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வளமார்பினில் வாழ்கின்ற மங்கையின் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைப்போர் புக்கும் முழங்கும் அப்பஞ்ச சன்னியமும் பல்லாண்டே

ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்
அருள் மாமழையை வார்க்கும் நீலனயணம்
அழியா மேன்மை வாழ்வு வாசல் வரணும்
அவன்தான் ரங்கன் அரங்கன்
மறை நூல் ஞான சுரங்கன்
மதுசூதன் மணிவண்ணன்
திருநாமம் பாட பாட இன்பம்
ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்

கோவிலில் நாள்தொரும் பூவாரம் சூட்டியே பூஜைகள் செய்கின்றவன்
வீட்டினில் அதுபோல தாய் தன்னை போற்றியே சேவைகள் செய்கின்றவன்
அவன் தான் நல்ல மனிதன்
அவன் போல் இல்லை புனிதன்
பால் போல் வெண்மை இதயம்
பரி போல் மென்மை வடிவம்
அவன் தாயாரை தாலாட்டி தாயாகிப் போனானே
ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்

தங்கையை இன்னும் ஓர் தாயாக போற்றியே பாசங்கள் வார்க்கின்றவன்
தாயினும் மேலான அன்பை தான் காட்டியே நேசங்கள் வளர்க்கின்றவன்
இது தான் நல்ல குடும்பம்
இதில் தான் தெய்வம் விளங்கும்
வாழும் மூவர் உறவும் வண்ண தமிழின் வடிவம்
இது எந்நாளும் ஆனந்தம் கொண்டாடும் வீடாகும்
ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்