Oru Sudar Iru Song Lyrics

ஒரு சுடர் இரு சுடர் பாடல் வரிகள்

Rajavin Parvaiyile (1995)
Movie Name
Rajavin Parvaiyile (1995) (ராஜாவின் பார்வையிலே)
Music
Ilaiyaraaja
Singers
Mano, S. Janaki
Lyrics
Vaali
ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட வண்ணச் சுடர் ஆடுதடி
கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும் அன்னக்கிளியே ஏற்று
காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும் அம்மனடியை போற்று
நல்ல நாளாம் திருநாளாம் ஒளிக்கோலம் திருக்கோலம்
நல்ல நாளாம் திருநாளாம் ஒளிக்கோலம் திருக்கோலம்

ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட வண்ணச் சுடர் ஆடுதடி

நான் ஓர் வரம் உன்னிடம் வாங்க வேண்டும்

மங்கள குங்குமம் மஞ்சள் பூசியே
பண்டிகை நாளென ஒன்றாக கூடியே

நூராண்டுகள் உன்னுடன் வாழ வேண்டும்

ஜோதியை வீதியில் எங்கும் ஏந்தியே
ஆதியை அண்டையை நெஞ்சில் போற்றியே

நாம் கேட்கும் யாவும் நம் கையில் சேரும்
நாம் பார்க்கும் யாவும் பூஞ்சோலை ஆகும்

வானம்பாடிகள் கானம் பாடிடும்
பொன் வசந்தம் விளங்கும் வருஷம் முழுதும்

ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி

திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட வண்ணச் சுடர் ஆடுதடி

கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும் அன்னக்கிளியே ஏற்று

காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும் அம்மனடியை போற்று

ஓர் ஆயிரம் ஆசைகள் ஊஞ்சலாடும்

நெஞ்சிலா நெஞ்சிலா நேசம் பூத்தது
கொஞ்சலா கொஞ்சவே நேரம் வாய்த்தது

ஓர் நாயகன் ஞாபகம் நீங்கிடாமல்

தோகையும் தோகையும் தேகம் வாடுது
தென்றலும் தென்றலும் ராகம் பாடுது
பொன் மாலை தோரும் பூந்தீபம் ஏற்றும்
சிங்காரம் கூடும் நல யோகம் வேண்டும்

தீபம் ஏற்றினால் மாலை மாற்றினால்
என் இதயம் முழுதும் வெளிச்சம் பரவும்

ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி

திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட வண்ணச் சுடர் ஆடுதடி

கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும் அன்னக்கிளியே ஏற்று

காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும் அம்மனடியை போற்று

நல்ல நாளாம் திருநாளாம் ஒளிக்கோலம் திருக்கோலம்
நல்ல நாளாம் திருநாளாம் ஒளிக்கோலம் திருக்கோலம்
ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட வண்ணச் சுடர் ஆடுதடி