Amman Koyil Ellamae Song Lyrics

அம்மன் கோயில் பாடல் வரிகள்

Rajavin Parvaiyile (1995)
Movie Name
Rajavin Parvaiyile (1995) (ராஜாவின் பார்வையிலே)
Music
Ilaiyaraaja
Singers
Arunmozhi
Lyrics
Vaali
அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம் அம்மா
நின்றாலும் எங்கு சென்றாலும்
எப்போதும் எது செய்தாலும்
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்

அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா

பாடங்கள் படித்தால் பாடத்தில் கவனம்
பாடிடும் வேளையில் பாடலில் கவனம்
பாவையை கண்டால் பருவத்தில் கவனம்
பார்க்கின்ற வேளையில் மகன் மணம் சிதறும்
அவன் மனமோ அது எங்கே சென்றாலும்
இவள் மனமோ அது பின்னாலே போகும்
என்றென்றும் அவள் எண்ணங்கள்
நலமாக நாம் வாழ நல்வாழ்த்து கூறும்

அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம் அம்மா
நின்றாலும் எங்கு சென்றாலும்
எப்போதும் எது செய்தாலும்
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்

அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா

காமுகன் ஆனாலும் கல்நெஞ்சன் ஆனாலும்
கயவன் என்றே அவன் பெயரெடுத்தாலும்
பொய் சொல்லி பிழைக்கும் பிள்ளை என்றானாலும்
பூமியில் ஆயிரம் தவறு செய்தாலும்
தன்மகனோ அவன் யாரான போதும்
அவன் நலமே இந்த தாயுள்ளம் தேடும்
என்றென்றும் அவள் எண்ணங்கள்
நலமாக நாம் வாழ நல்வாழ்த்து கூறும்

அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம் அம்மா
நின்றாலும் எங்கு சென்றாலும்
எப்போதும் எது செய்தாலும்
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்

அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம் அம்மா