Vinnathaandi Anbe Song Lyrics

விண்ணை தாண்டி பாடல் வரிகள்

Irandaam Ulagam (2013)
Movie Name
Irandaam Ulagam (2013) (இரண்டாம் உலகம்)
Music
Harris Jayaraj
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu

நீயா... நீயா... நீயே சொல்லு

விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா

மறைந்தது அங்கே...
மலர்ந்தது இங்கே மாயமா மாயமா
சொல் நடந்தது பொய்யா... நடப்பது பொய்யா
காதலே நியாயமா

என் காதல் நிலா தன் கை வீசுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ...

நீயா... நீயா... நீயே சொல்லு நீயே நீயா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா

நீயா... நீயா... நீயே சொல்லு நீயே நீயா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா

அந்த பனிகண்கள் பொங்கும் ஒளி பார்வை
என்னை கொல்லாமல் கொல்லுதடி
இது நிஜம் தானா இல்லை நிழல் தானா
என்ற வினோதம் மின்னுதடி

வண்ணம் அழிந்த பின்னும்,
எண்ணம் வாழ்கின்றதே
வாழ்வே மாயமா...

கண்ணை திறந்தபடி,
இன்னும் கனவுகளா
எல்லாம் சோகமா...

கருகிய நெஞ்சில் பெருகிய கண்ணீர் காதலை மீட்குமா
நான் கனவிலும் இல்லை நினைவிலும் இல்லை காதலே நியாயமா

விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா

இது புது லோகம் அது புது வானம்
அங்கு நிலாக்கள் ரெண்டு உண்டு
இவள் அவள் தானா அவள் இவள் தானா
என்ற வினாக்கள் நெஞ்சில் உண்டு

திசு அழிந்தாலும் தசை எரிந்தாலும் ஆன்மா அழியுமா
எந்தன் பேர் என்ன எந்தன் உறவென்ன இவள் உள்ளம் அறியுமா

காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாறும் காதலே கடவுளா

ஓ... காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாறும் காதலே கடவுளா

நீயா... நீயா... நீயே சொல்லு நீயே நீயா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா

விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா

மறைந்தது அங்கே...
மலர்ந்தது இங்கே மாயமா மாயமா
சொல் நடந்தது பொய்யா... நடப்பது பொய்யா
காதலே நியாமா

என் காதல் நிலா தன் கை வீசுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ...