Kolam Inge Vaasal Enge Song Lyrics

கோலம் இங்கே வாசல் பாடல் வரிகள்

Kalyana Paravaigal (1988)
Movie Name
Kalyana Paravaigal (1988) (கல்யாணப்பறவைகள்)
Music
Rajan & Rajan
Singers
K. J. Jesudass
Lyrics
Vairamuthu
கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே

கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே

நீயும் நானும் அழுத கண்ணீர் ஆறானது
அந்த நீரில் பரிசல் இங்கே போகின்றது
நீயும் நானும் அழுத கண்ணீர் ஆறானது
அந்த நீரில் பரிசல் இங்கே போகின்றது

கோடை நாளில் நீருமில்லை
ஓடைக்கென்ன நிந்தனை
உதடு உண்டு முத்தம் இல்லை
நான்கு கண்ணில் வேதனை
விதி வந்துதான் ஏதோ தடைப்போட்டது
இதற்காகவா தாலி முடிப் போட்டது

கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே

இந்த ஞாயம் இந்த தர்மம் ஏன் வந்தது
பாசம் கொண்ட ஜீவன் ரெண்டு தள்ளாடுது
இந்த ஞாயம் இந்த தர்மம் ஏன் வந்தது
பாசம் கொண்ட ஜீவன் ரெண்டு தள்ளாடுது

சாதி இங்கே சதிகள் செய்தால் நீதி எங்கே போவது
வேலி வந்து காலில் தைத்தால் பயணம் என்ன ஆவது
துயர் தீருமே கொஞ்சம் மயங்காதிரு
சுகம் ஆகுமே நெஞ்சே கலங்காதிரு

கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே

கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ...