Kumari Pennin Song Lyrics

குமரிப்பெண்ணின் பாடல் வரிகள்

Enga Veettu Pillai (1965)
Movie Name
Enga Veettu Pillai (1965) (எங்க வீட்டுப் பிள்ளை)
Music
Viswanathan Ramamoorthy
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்

அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்

நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே புரியும்
நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே புரியும்

கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையை தேடி நீ வரலாம்
கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையை தேடி நீ வரலாம்

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

பூவை என்பதோர் பூவை கண்டதும்
தேவை தேவை என்று வருவேன்

இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க
அதை உன்னை கேட்டு நான் தருவேன்

கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது

அந்த அழகே வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெரலாம்

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்